இரசிகை-இரசித்தவை

Tuesday, September 19, 2006

பாலை மரமே பாலை மரமே பார்த்தியா?

தாயகப்பறவைகளுக்காக
http://www.thayakaparavaikal.com/August-poems.html

பாலை மரமே பாலை மரமே பார்த்தியா?
எங்கள் பாலர்கள் நீறானார் பார்த்தியா?
தேக்கு மரமே தேக்கு மரமே பார்த்தியா?
எங்கள் செல்வங்கள் சிதைஞ்சு போச்சே
நீயும் தேம்பி அழுதியா?

யார் மடியில் தலை சாய்த்து அழ?
யாரிடம் சென்று நாம் அவரை திருப்பிக் கேட்க
ஈன்ற தாயும் இழந்தார் ஏந்தி வளர்த்த
தந்தையையும் இழந்தார்..!

வாழ்வு ஒன்று வரும் என்றே
நம்பி எழுந்து நடக்க முனைந்தார்
அந்தோ சிங்கம் பசியாற
சிசுக்களை தின்று தொலைத்தது பார்..!

நந்தவனம் எரிஞ்சு போச்சு
நடுவில் நின்று உறுதி கொள்கிறோம்
சிங்க இன வாழ்வொழித்து அதன்
சிரசுகள் ஒன்றாய் குவித்து
எங்கள் செங்கொடி ஏறும் திருநாள்
வந்தே ஆகும் சொல்கிறோம்..!

2 Comments:

Post a Comment

<< Home