இரசிகை-இரசித்தவை

Tuesday, August 08, 2006

பொன் மாலைப் பொழுது...!

என்னைக் கவர்ந்த வைரமுத்துவின் முதல் திரைப்பட பாடலான "இது ஒரு பொன் மாலைப்பொழுது.." என்ற பாடலில் வரும் சரணங்கள் இரண்டைத்தான் அறிந்திருப்பீர்கள். ஆனால் அப்பாடலுக்காக அவர் எழுதியது மூன்று சரணங்கள். இதோ அந்தப் பாடல் விட்டுப்போன வரிகளுடன்..

படம் : நிழல்கள்

இது ஒரு பொன் மாலைப் பொழுது - இது

ஒருஇது ஒரு பொன் மாலைப் பொழுது

வானமகள் நாணுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்

ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
ராத்திரி வாசலில் கோலமிடும்
வானம் இரவுக்குப் பாலமிடும்
பாடும் பறவைகள் கானமிடும்

பூமரங்கள் சாமரங்கள்
வீசாதோ?

வானம் எனக்கொரு போதிமரம்
நாளும் எனக்கது சேதிதரும்
ஒரு நாள் உலகம் நீதி பெறும்
திருநாள் நிகழும் தேதி வரும்

கேள்விகளால் வேள்விகளை
நான் செய்வேன் ..

(விட்டுப்போனது)

இரவும் பகலும் யோசிக்கிறேன்
எனயே தினமும் பூசிக்கிறேன்
சாலை மனிதரை வாசிக்கிறேன்
தீயின் சிவப்பை நேசிக்கிறேன்

பேதங்களே வேதங்களா
கூடாது

0 Comments:

Post a Comment

<< Home